மேற்குவங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியது. மே 19 அன்று இறுதிக்கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் இடதுமுன்னணி தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். டம்டம் தொகுதியில் களம் காணும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரும் மேற்குவங்க கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான நேபால் தேவ் பட்டாச்சார்யாவை ஆதரித்து செங்கொடிகள் ஏந்தி பல்லாயிரக்கணக்கானோர் அணிவகுக்க பிரச்சாரத்தை தலைமையேற்று, வாக்காளர்களிடம் வாக்கு கேட்டு செல்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.